சுவர் விளம்பரம் எழுதுவதில் தகராறு: திமுக - அதிமுகவினர் இடையே மோதல்

கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் சுவர் விளம்பரம் எழுதுவது தொடர்பாக திமுக - அதிமுகவினரிடையே மோதல் ஏற்பட்டது.

Update: 2021-11-01 07:59 GMT
கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் சுவர் விளம்பரம் எழுதுவது தொடர்பாக திமுக - அதிமுகவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில், 75 வது வார்டு திமுக  பொறுப்பாளர் நியான்குமார் மற்றும் மகளிரணி வாசுகி ஆகியோர் காயமடைந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 50 வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு அதிமுகவினர் சுவர் விளம்பரம் எழுதியிருந்த நிலையில், அதனை திமுகவினர் சுண்ணாம்பு கலவையை ஊற்றி அழிக்க  முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.   

Tags:    

மேலும் செய்திகள்