கனிமம், மணல் கடத்தலை தடுப்பது குறித்த வழக்கு "நெல்லை, குமரி ஆட்சியர் பதில் கூற வேண்டும்" - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

வெளி மாநிலங்களுக்கு கனிமங்கள் மற்றும் மணல் கடத்தப்படுவதை தடுக்க சிறப்பு சோதனை சாவடி அமைக்க கோரிய வழக்கில், நெல்லை,குமரி மாவட்ட ஆட்சியர்கள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-09-09 06:27 GMT
 நெல்லை மாவட்டத்தை சேர்ந்த கண்மணி மாவீரன் என்பவர் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆட்சியர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை, அக்டோபர் 25 ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்