பைபர் படகு மீது ரோந்து கப்பல் மோதி விபத்து - மீனவர்கள் இருவர் காயம்

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் மீனவர்கள் படகு மீது இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான கப்பல் மோதியதில், இருவர் காயமடைந்தனர்.

Update: 2021-09-07 10:46 GMT
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் மீனவர்கள் படகு மீது இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான கப்பல் மோதியதில், இருவர் காயமடைந்தனர்.  புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் நான்கு பேர், பைபர் படகில் வேதாரண்யம் கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது, அந்த வழியாக ரோந்து வந்த இந்திய கடலோர காவல் படைக்குச் சொந்தமான கப்பல், பைபர் படகு மீது மோதியது. இதில், செல்லமணி என்பவர் நிலைதடுமாறி கடலில் விழுந்தார். மேலும், மீன்பிடி வலை கப்பலில் சிக்கி வெகு தூரம் இழுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதனிடையே, வலையை பிடித்து கடலில் தத்தளித்த செல்வமணியை, மற்றொரு படகில் வந்த மீனவர்கள் மீட்டனர். மூன்று மணி நேரம் உயிருக்கு போராடிய செல்வமணி மற்றும் மகாலிங்கம் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டதால், வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


Tags:    

மேலும் செய்திகள்