கொரோனா விதிகளை மீறியவர்களுக்கு அபராதம் - ஒரே நாளில் ரூ.73,300 அபராதம் வசூல்

சென்னையில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாதவர்களிடம் இருந்து ஒரே நாளில் 73 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.

Update: 2021-07-22 01:58 GMT
சென்னையில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாதவர்களிடம் இருந்து ஒரே நாளில் 73 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத வணிக வளாகங்கள் மற்றும் தனிநபர்களிடம் இருந்து தொடர்ச்சியாக அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் சிறப்பு அமலாக்க குழுவினர் நடத்திய ஆய்வில் 73 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்து உள்ளது. கோடம்பாக்கம் மண்டலத்தில் அதிகபட்சமாக 10 ஆயிரம் ரூபாயும், அம்பத்தூர் மண்டலத்தில் 9 ஆயிரம் ரூபாயும் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்