மகளிர் சுய உதவிக்குழுவில் கடன் வாங்கி மோசடி - ரூ.45 லட்சம் வரை மோசடி செய்ததாக புகார்

மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் கடன் பெற்று 45 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.

Update: 2021-07-12 13:53 GMT
மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் கடன் பெற்று 45 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டியை சேர்ந்த ரசியா என்பவர் சிற்றுண்டி நடத்தி வந்த நிலையில், தனது தொழிலை அபிவிருத்தி செய்வதாக கூறி மகளிர் சுய உதவிக்குழுவின் மூலம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வாங்கிய கடனுக்கு முறையான பதில் அளிக்காமல் தலைமறைவாக இருக்கும் ரஸியா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்