குடியிருப்பு பகுதியில் உடல் அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு - முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார்

நெல்லை அருகே குடியிருப்பு பகுதியில் உடல் அடக்கம் செய்ய, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Update: 2021-06-10 12:01 GMT
நெல்லை அருகே குடியிருப்பு பகுதியில் உடல் அடக்கம் செய்ய, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள அகஸ்தியர்பட்டி  விநாயகர் காலனியில், மருத்துவர் மைக்கேல் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.இவரது தாயார் மரிய அடைக்கலம், உடல்நலக்குறைவால், நேற்று உயிரிழந்தார். இதையடுத்து, அவரது வீட்டின் பின்புறம் அவருக்கு சொந்தமான இடத்தில் தனது தாயாரின் உடலை அடக்கம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதற்கு விநாயகர் காலனி மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்,அதை மீறி உடலை அடக்கம் செய்தனர்.  இதைக்கண்டித்து அப்பகுதி மக்கள்,
வி.ஏ.ஓ, ஆர்.ஐ மற்றும் முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்