பல மாதமாக மூடிக்கிடக்கும் திரையரங்குகள்; சிறிய திரையரங்கு உரிமையாளர்கள் அவதி - திறக்க அனுமதிக்க கோரிக்கை

ஊரடங்கினால் சிறிய திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.

Update: 2021-06-07 04:03 GMT
ஊரடங்கினால் சிறிய திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். 

கொரோனா ஊரடங்கினால் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் திரையரங்கம் உரிமையாளர்கள், மிகவும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். முக்கியமாக, சிறிய திரைப்பட திரையரங்கு உரிமையாளர்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். திரையரங்கு வருமானம் தடைபட்டுள்ளதால், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலைக்கு உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். வருமானம் இல்லாததால், அடிப்படை தேவைகள் கூட பூர்த்தி செய்ய முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதாக ஊழியர்கள் வேதனை தெரிவித்தனர். கட்டுப்பாடுகளுடன் சிறிய திரையரங்குகளை திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்