பகவதி அம்மன் கோயில் தீ விபத்து - பார்வையிட்ட அமைச்சர் சேகர்பாபு

பகவதி அம்மன் கோவில் தீ விபத்து குறித்து எட்டு ஊழியர்களிடம் விசாரணை நடத்தியுள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

Update: 2021-06-05 03:15 GMT
பகவதி அம்மன் கோவில் தீ விபத்து குறித்து எட்டு ஊழியர்களிடம் விசாரணை நடத்தியுள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் தீக்கிரையான பகுதிகளை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீ விபத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறநிலையத்துறையின் செலவில் போர்க்கால அடிப்படையில் புனரமைக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்