கொரோனா விழிப்புணர்வு ஓவியங்கள்: 1.50 லட்சம் ஓவியங்கள் வரைய முடிவு
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழ்நாடு ஓவியர்கள் சங்கம் சார்பில் பூந்தமல்லி, நசரத்பேட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுவர்களில் பிரம்மாண்டமான கொரோனா படங்களை வரைந்து வருகின்றனர்.;
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழ்நாடு ஓவியர்கள் சங்கம் சார்பில் பூந்தமல்லி, நசரத்பேட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுவர்களில் பிரம்மாண்டமான கொரோனா படங்களை வரைந்து வருகின்றனர். கடந்த ஆண்டு சுமார் ஒரு லட்சம் விழிப்புணர்வு சுவர் விளம்பரங்களை வரைந்ததாகவும், இந்த ஆண்டு 1.50 லட்சம் சுவர் விளம்பரங்களை வரைய உள்ளதாகவும் தமிழ்நாடு ஓவியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஓவியர்கள் இருப்பதாகவும், வாழவாதாரம் பாதிக்கப்பட்ட அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என அரசுக்கு ஓவியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.