என்எல்சி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவர் என்.எல்.சி நிறுவனத்தில் நிரந்தர தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.

Update: 2021-05-31 10:31 GMT
கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்த  சுந்தரமூர்த்தி என்பவர் என்.எல்.சி நிறுவனத்தில் நிரந்தர தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்,. நேற்று மதியம் பணிக்கு சென்ற அவர், இரவு 9 மணி அளவில் பணி செய்யும் இடத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்,. இது குறித்த தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்,. சுந்தரமூர்த்தி தனது பணியில் இருந்து இன்று ஒய்வு பெற இருந்த நிலையில் அவர் திடீரென தற்கொலை செய்து கொண்டது குடும்பத்தினர் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
Tags:    

மேலும் செய்திகள்