"சூரப்பா மீது நடவடிக்கை -மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நீட்டிப்பு" - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க விதித்த தடையை, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Update: 2021-04-16 11:21 GMT
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பாவுக்கு எதிரான  ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு, 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உத்தரவு பிறப்பித்தது.இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், விசாரணை ஆணையத்துக்கு தடை கோரியும், சூரப்பா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கு மீதான விசாரணையின் போது, தன்னை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்ற காரணத்திற்காகவே விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டதாக சூரப்பா தரப்பில் தெரிவிக்கப்பட்டது,. மேலும் தற்போது பணி ஓய்வு பெற்றுவிட்டதால், விசாரணை ஆணையம் செல்லத்தக்கதல்ல எனவும் அப்போது தெரிவிக்கப்பட்டது,. நீதிபதி கலையரசன் ஆணையத்தின் விசாரணை தொடர்ந்து நடந்து வருவதாலும், அதன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை கூடாது என இடைக்கால உத்தரவு உள்ளதாலும் வழக்கை ஒத்திவைக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. 
இதனை ஏற்ற நீதிபதி கோவிந்தராஜ், இடைக்கால உத்தரவை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நீட்டித்து, வழக்கை ஜூன் மாதத்திற்கு தள்ளிவைத்துள்ளார்


Tags:    

மேலும் செய்திகள்