அதிமுக அரசு அனைத்து துறைகளிலும் சாதனை - ஈ.பி.எஸ். ஓ.பி.எஸ். கூட்டாக அறிக்கை

அதிமுக அரசு அனைத்து துறைகளிலும் சாதனை நிகழ்த்தியதோடு, அனைத்து தரப்பினரும் அமைதியாக வாழ்வதற்கு வழிவகை செய்துள்ளதாக அக்கட்சி தலைமை தெரிவித்துள்ளது.

Update: 2021-04-02 12:54 GMT
அதிமுக அரசு அனைத்து துறைகளிலும் சாதனை நிகழ்த்தியதோடு, அனைத்து தரப்பினரும் அமைதியாக வாழ்வதற்கு வழிவகை செய்துள்ளதாக அக்கட்சி தலைமை தெரிவித்துள்ளது.

இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏழை எளிய மாணவர்களின் மருத்துவர் கனவை நனவாக்க 7 புள்ளி 5 இட ஒதுக்கீடு மூலம் 435 மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைத்துள்ளதாகவும், வறட்சி மானியமாக 32 லட்சம் விவசாயிகளுக்கு இரண்டு ஆயிரத்து 247 கோடி ரூபாய் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், அதிமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டுள்ள அவர்கள், அதிமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து எதிர்க்கட்சிகள் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்தால் கட்டப் பஞ்சாயத்து, நில அபகரிப்பு,  ஊழல் நிர்வாக சீர்கேடு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டு தமிழகத்தில் அமைதி இல்லாத நிலை ஏற்படும் என்பதை உணர்ந்து தமிழக மக்கள் வாக்களிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்