வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

நிலக்கரி இறக்குமதி தொடர்பான டெண்டருக்கு தடை கோரிய வழக்கில் தமிழக அரசு இன்று பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-02-23 03:18 GMT
நிலக்கரி இறக்குமதி தொடர்பான டெண்டருக்கு தடை கோரிய வழக்கில்  தமிழக அரசு இன்று பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியில் தனியார் நிலக்கரி நிறுவனத்தை சேர்ந்த திருமலைச்சாமி என்பவர் தொடர்ந்த வழக்கில், ஆயிரத்து 330 கோடி ரூபாய் மதிப்பிலான, டெண்டருக்கு தடை கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி புகழேந்தி, டெண்டருக்கான கால அவகாசத்தை நீட்டிக்க முடியுமா? உள்நாட்டு நிறுவனங்கள் பங்கேற்க வாய்ப்பு உள்ளதா? என்பது குறித்து நாளை காலை பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.  இதேபோல, மின் வாரிய முன்னாள் பொறியாளர் செல்வராஜ் தொடர்ந்துள்ள  பொதுநல வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்