ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி

மகனுக்கு வலிப்பு நோய், வயிற்று வலி பிரச்சினை இருந்த விரக்தியில் 2 பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2021-02-16 13:29 GMT
மகனுக்கு வலிப்பு  நோய், வயிற்று வலி பிரச்சினை இருந்த விரக்தியில் 2 பிள்ளைகளுக்கு விஷம்  கொடுத்துவிட்டு கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாகர்கோவில்  பட்டசாலியன்விளை பகுதியை சேர்ந்தவர் கண்ணன். தச்சு வேலை பார்த்து வந்தார். இவரது   மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு அனுஷ்கா என்ற மகளும், விஷால் என்ற மகனும் இருந்தனர். கடந்த சில நாட்களாக கண்ணன் வேலைக்கு செல்லாமல் இருந்த நிலையில் திடீரென இவர்களின் வீடு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் வந்து பார்த்த போது மனைவி மற்றும் பிள்ளைகள் 2 பேரும் விஷம் குடித்த நிலையில் படுக்கையில் சடலமாக கிடந்தனர். மேலும் கண்ணன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். மகன் வலிப்பு நோய் மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததால் இந்த முடிவை எடுத்ததாக அவர்கள் எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்