சாத்தான்குளம் சம்பவத்தில் காவலர்கள் ஜாமீன் கோரி மனு தாக்கல்

சாத்தான்குளம் சம்பவத்தில் கைதாகி சிறையில் உள்ள காவலர்கள் ஜாமீன்கோரி மனுத்தாக்கல் செய்த நிலையில் விசாரணையை நாளை மறுநாளுக்கு ஒத்தி வைத்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.

Update: 2020-11-23 12:45 GMT
சாத்தான்குளம் சம்பவத்தில் கைதான ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 போலீசார் மதுரை மத்திய சிறையில் உள்ளனர். இதில் காவலர்கள் முருகன், வெயில் முத்து, தாமஸ் பிரான்சிஸ், முத்துராஜ் ஆகிய 4 பேரும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடர்பாக விரிவான வாதம் செய்ய வேண்டும் என்பதால் அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார். 


Tags:    

மேலும் செய்திகள்