பள்ளி, கல்லூரி திறப்பை தள்ளி வைக்க அரசு பரிசீலனை?

தமிழகத்தில் வருகிற 16-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ள நிலையில், கொரோனா பரவல் மற்றும் பருவமழை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பள்ளி, கல்லூரிகள் திறப்பை தள்ளி வைக்க அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2020-11-03 05:44 GMT
தமிழகத்தில் வருகிற 16-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ள நிலையில், கொரோனா பரவல் மற்றும் பருவமழை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பள்ளி, கல்லூரிகள் திறப்பை தள்ளி வைக்க அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக கல்வித்துறை அதிகாரிகளுடன் நேற்று முதல்வர் ஆலோசனை நடத்தியதாகவும், அப்போது பள்ளி, கல்லூரிகள் திறப்பை தள்ளி வைப்பது குறித்து பேசப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே, பள்ளி, கல்லூரிகளைத் தற்போது திறக்கக் கூடாது என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்