காவலர் பயிற்சி பள்ளியில் திருநங்கை தற்கொலை முயற்சி - காவலர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியதாக புகார்

திருச்சியில் காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வந்த திருநங்கை தற்கொலையில் முயற்சியில் ஈடுபட்டதை தொடர்ந்து காவலர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2020-10-12 07:58 GMT
திருச்சி மாவட்டம் நவல்பட்டில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை சம்யுக்தா கடந்த 2 மாதங்களாக பயிற்சி பெற்று வருகிறார். இந்த நிலையில் கடந்த 9ஆம் தேதி சம்யுக்தா கிருமி நாசினியை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அப்போது அவரிடம் நடத்திய விசாரணையில் காவலர்கள் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டுவதாக கூறியிருந்ததை தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து பயிற்சி பள்ளியின் உதவி காவல் ஆய்வாளர் அசோக்குமார் மற்றும் காவலர் இஸ்ரேல் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்