10 மாதங்களில் 206 இருசக்கர வாகனங்கள் மாயம் - 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை

சென்னையில் தியாகராயநகர் காவல் மாவட்டத்திற்குட்பட்ட 14 காவல்நிலையங்களில், கடந்த 10 மாதங்களில் 206 இருசக்கர வாகனங்கள் காணாமல் போனதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது

Update: 2020-10-11 12:10 GMT
சென்னையில் தியாகராயநகர் காவல் மாவட்டத்திற்குட்பட்ட 14 காவல்நிலையங்களில், கடந்த 10 மாதங்களில் 206 இருசக்கர வாகனங்கள் காணாமல் போனதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உதவி ஆய்வாளர்கள் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்றது. இதில், ரயில், பேருந்து நிலைய வாகன நிறுத்தங்களில் இருந்து 30 வாகனங்களை போலீசார் கண்டெடுத்துள்ளனர். மேலும், காணாமல் போன அல்லது திருடப்பட்ட மற்ற வாகனங்களையும் தேடும் பணியை துரிதப்படுத்தப்படுத்தி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்