கஞ்சா விற்பனையாளர்கள் உடன் கைகோர்த்த எஸ்.ஐ. - பணியிடை நீக்கம் செய்து எஸ்.பி. அதிரடி உத்தரவு

திருமயம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த தவறிய, உதவி ஆய்வாளர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

Update: 2020-10-08 08:31 GMT
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் காவல் நிலையத்திற்கு  உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வருவதாக  எஸ்.பி. பாலாஜி சரவணனுக்கு ரக​சிய தகவல் கிடைத்துள்ளது.  இதனை அடுத்து, கஞ்சா விற்பனையை தடுக்க தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. காவல் எல்லைப் பகுதியில் கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வருவதும், அதனை உதவி ஆய்வாளர்  ஸ்டாலின் கட்டுப்படுத்த முயலாமல், அவர்களோடு கைகோர்த்து செயல்பட்டதும் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஸ்டாலினை தற்காலிக பணிநீக்கம் செய்து எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்