இந்தியா எப்போதும் சுயநலத்துடன் சிந்தித்தது இல்லை - பிரதமர் மோடி உரை தமிழில்

அமெரிக்க அதிபர் டிரம்ப், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உள்பட 112 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு

Update: 2020-09-26 14:25 GMT
ஐக்கிய நாடுகள் சபையின் ஸ்தாபன உறுப்பினர்களில் ஒருவர் என்பதில் இந்தியா பெருமிதம் கொள்கிறது
* 130 கோடி மக்களின் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள வந்துள்ளேன்
* மக்கள் தங்கள் வாழ்நாள் சேமிப்பை இழக்கும் நிலை ஏற்பட்டது
* கடந்த 8 மாதங்களாக கொரோனா தொற்றால் உலகமே போராடி வருகிறது
" தீவிரவாதம் என்பது உலக அமைதிக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது"
* உலக பொருளாதாரத்தை சீர்திருத்த வழிகள் இருக்கின்றன
* நாங்கள் வலிமையாக இருந்தபோது உலகிற்கு எந்த சுமையும் தரவில்லை
* ஐ.நா. சபை உருவாக்கப்பட்ட நோக்கம் இந்திய சிந்தனைகளுடன் இணைந்தது
* இந்த உலகத்தை நாங்கள் குடும்பமாக கருதுகிறோம், இது எங்கள் கலாசாரம்
* ஐ .நா. அவையில் இந்தியா அதைத்தான் எதிரொலித்திருக்கிறது
* உலகில் அமைதியை நிலைநாட்ட இந்தியா பல வீரர்களை இழந்துள்ளது
* அக். 2 உலக அமைதி தினம், அதை உருவாக்கியது இந்தியா
* எப்போதும் இந்தியா சுயநலத்துடன் சிந்தித்தது இல்லை
* அனைத்து மதங்களையும் உள்ளடக்கி செயல்படுகிறது இந்தியா
* இந்தியா யாருக்கும் எப்போதும் எதிராக இருந்ததில்லை
* எங்கள் வளர்ச்சியில் இருந்த திட்டங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதில் பின் தங்கியதில்லை
* உலகின் 150 நாடுகளுக்கு கொரோனா மருந்தை இந்திய மருத்துவமனைகள் அளித்துள்ளன
* கொரோனா தடுப்பு மருந்து சோதனையில் 3 நிலைகளை கடந்துள்ளோம்
* அடுத்தாண்டு ஜனவரி மாதம் இந்தியா கொரோனா தடுப்பில் தனது பொறுப்பை நிறைவேற்றும்
* அமைதி,பாதுகாப்புக்காகத்தான் இந்தியா எப்போதும் குரல் எழுப்பும்
* மாற்றம், சீர்திருத்தம் என்ற மந்திரங்கள் மூலம் இந்திய மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த பாடுபடுகிறோம்
* இந்த மந்திரம் மற்ற நாடுகளுக்கும் பலன் அளிக்கக் கூடியது
* 500 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு இந்தியா இலவச மருந்து வழங்கியுள்ளது
* கிராமங்களிலுள்ள 150 மில்லியன் வீடுகளுக்கு குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கியுள்ளது
* ஆப்டிகல் பைபர் மூலம் இணைய வசதியையும் பரவலாக்கப்பட்டுள்ளது
* சுயசார்பு இந்தியா கொள்கையை முன்னெடுக்கிறோம். பெண்கள் சுய வேலைவாய்ப்பை ஊக்குவிக்கிறோம்
* இந்தியப் பெண்கள்தான் உலகின் சிறந்த மைக்ரோ பொருளாதாரத்தை முன்னெடுக்கிறார்கள்
* இந்தியாவில் பெண்களுக்கு 26 வாரம் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை வழங்கப்படுகிறது
* மூன்றாம் பாலினத்தவருக்கும் தனித்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்
Tags:    

மேலும் செய்திகள்