பெரியார் பல்கலைக்கழக தமிழ்துறை தலைவர் பெரியசாமி மீது புகார் - போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாக குற்றச்சாட்டு
சேலம் பெரியார் பல்கலைக்கழக தமிழ் துறை தலைவர் பெரியசாமி போலி சான்றிதழ் கொடுத்து முறைகேடாக பணியில் சேர்ந்ததாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் பெரியார் பல்கலைக்கழக தமிழ் துறை தலைவர் பெரியசாமி போலி சான்றிதழ் கொடுத்து முறைகேடாக பணியில் சேர்ந்ததாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சார்பில் போலீசில் அளிக்கப்பட்டுள்ள புகாரில் பெரியசாமி,ஒரே ஆண்டில் 3 இடங்களில் முழு நேர பணியில் இருந்து கொண்டே முனைவர் பட்டம் பயின்றதாக போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பெரியசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.