சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியேற்றினார்.

Update: 2020-08-15 08:48 GMT
சென்னை கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தின கொண்டாட்டம் நடைபெற்றது. போக்குவரத்து துறையின் காவல் வீரர்கள் புடை சூழ முதலமைச்சர் கோட்டை கொத்தளத்திற்கு வருகை தந்தார். அவரை தமிழக தலைமை செயலாளர்  சண்முகம் வரவேற்று, ராணுவம் மற்றும் காவல்துறை அதிகாரிகளை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் திறந்த ஜீப்பில் சென்ற முதலமைச்சர், முப்படை மற்றும் காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் சுதந்திர தின உரையாற்றிய முதலமைச்சர் பழனிசாமி, கொரோனாவுக்கு எதிரான போரில் தமிழகம் வெல்லும் என உறுதி அளித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்