பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாக பேசியதாக புகார் - விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 2 பேர் கைது

பழனியில் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகவும் ஆபாசமாக பேசி சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2020-08-10 10:57 GMT
பழனியில் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகவும், ஆபாசமாக பேசி சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். பழனி ரயில்வே பீடர் சாலை விணிவாக்கப் பணிக்காக,  அங்கிருக்கும் பெரியார் சிலையை அகற்றக்கோரிய விவகாரத்தில், வி.சி.கவைச் சேர்ந்த இருவர், பிரதமர் மோடியை பற்றி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து பாஜகவினர் அளித்த புகாரைத்தொடர்ந்து, விசிகவை சேர்ந்த  இருவரை போலீசார் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்