கோயில்களை திறக்கக்கோரி சாமியார் உண்ணாவிரதம் - மதுக்கடைகளை படிப்படியாக மூட கோரிக்கை
அனைத்து திருக்கோயில்களையும் உரிய பாதுகாப்புடன் வழிபாட்டிற்கு திறக்க வலியுறுத்தி, கும்பகோணம் அருகே உள்ளூர் கிராமத்தில் திருவடி குடில் சாமிகள் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
அனைத்து திருக்கோயில்களையும் உரிய பாதுகாப்புடன் வழிபாட்டிற்கு திறக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கும்பகோணம் அருகேயுள்ள உள்ளூர் கிராமத்தில் திருவடி குடில் சாமிகள் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார், அவருடன் அவரது சீடர்களும் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை ரத்து செய்ய வேண்டும், மதுபானக் கடைகளை படிப்படியாக மூட சுதந்திர தினத்தன்று அறிவிப்பு வெளியிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளையும் திருவடி குடில் சாமிகள் தமிழக அரசுக்கு வைத்துள்ளார்,. கும்பகோணம் போலீசார் அனுமதி மறுத்த இருந்த நிலையில் அவர் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது