அக்கா என்னும் அம்மாவுக்கு வீரவணக்கம்! - வி.சி.க. தலைவர் திருமாவளவன் இரங்கல் அறிக்கை

கொரோனாவால் உயிரிழந்த தமது மூத்த சகோதரி நினைவாக, அக்கா என்னும் அம்மாவுக்கு வீரவணக்கம் என்ற தலைப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் -திருமாவளவன் உருக்கமான இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Update: 2020-08-06 16:25 GMT
கொரோனாவால் உயிரிழந்த தமது மூத்த சகோதரி நினைவாக, அக்கா என்னும் அம்மாவுக்கு வீரவணக்கம் என்ற தலைப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் -திருமாவளவன் உருக்கமான இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், அக்கா என்னும் அம்மா ' !  கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக எனக்காக வாழ்ந்தவர் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.  கால்நூற்றாண்டாய் எனக்காக, வாழ்ந்த அக்காவை பாதுகாக்கத் தவறிவிட்டேனே என்கிற குற்ற உணர்வு நெஞ்சை நெருப்பாய் சுடுவதாகவும் திருமாவளவன் கூறியுள்ளார். தன்னை அர்ப்பணித்துக் கொண்ட  அக்கா என்னும் அம்மாவுக்கு  நெஞ்சார்ந்த நன்றியைக் காணிக்கையாக்குவதாகவும், திருமாவளவன் வெளியிட்ட இரங்கல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

இயன்ற வகையில் மக்கள் பணியிலும் பங்கேற்ற வான்மதி என்னும் விடுதலைச்சிறுத்தைக்கு கட்சியின் சார்பில் செம்மாந்த வீரவணக்கத்தை செலுத்துவதாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்