தென் மாவட்டங்களில் முதலமைச்சர் ஆய்வு - மாவட்ட ஆட்சியர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் சந்திப்பு
கொரோனா பாதிப்புக்குள்ளான தென் மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் ஆய்வு நடத்துகிறார்.
கொரோனா பாதிப்புக்குள்ளான தென் மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் ஆய்வு நடத்துகிறார். வருகின்ற 6 ஆம் தேதி மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், சுகாதார துறை அதிகாரிகளுடன் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து நேரில் ஆய்வு மேற்கொள்கிறார். இதே போல், நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் ஏழாம் தேதி, கொரோனா வைரஸ், கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிகிறார். மேலும், தென் மாவட்டங்களில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டங்களில் விவசாய சங்கங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களின் பிரதிநிதிகளுடனும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்த உள்ளார்.