பல்கலை., கல்லூரி தேர்வுகள் நடத்த அனுமதி

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் தேர்வுகளை நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

Update: 2020-07-06 16:02 GMT
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் தேர்வுகளை நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக மத்திய உயர்கல்வித்துறை செயலாளருக்கு  உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. அதில், யுஜிசி வழிகாட்டுதலின்படி இறுதி ஆண்டு தேர்வுகளை கட்டாயம் நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் உள்ளபோதும் தேர்வு நடைமுறைகள் அனைத்திற்கும் அனுமதி வழங்கப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்