முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா தொற்று - போரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை

தமிழக பாடநூல் கழக தலைவரும் முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-07-06 08:37 GMT
தமிழக பாடநூல் கழக தலைவரும் முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்  சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்., இந்த நிலையில் அவரது குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறையினர் முடிவு செய்துள்ளனர். அதிமுகவில் அமைச்சர் கே.பி.அன்பழகன் உள்ளிட்ட 5 சட்டமன்ற உறுப்பினர்களும், திமுக எம்.எல்.ஏக்கள் 3 பேரும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Tags:    

மேலும் செய்திகள்