மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்த காவலர் உயிரிழப்பு - குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது விபரீதம்
சென்னை மாதவரம் மஞ்சம்பாக்கத்தில் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் தலைமை காவலராக பணிபுரிந்து வரும் தேசிங்,
சென்னை மாதவரம் மஞ்சம்பாக்கத்தில் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் தலைமை காவலராக பணிபுரிந்து வரும் தேசிங், திருவொற்றியூர் குப்பம் பட்டினத்தார் கோவில் தெருவில் வசித்து வருகிறார். இந்நிலையில் வீட்டு மொட்டை மாடியில் விளையாடி கொண்டிருந்த போது திடீரென்று கால் இடறி தேசிங் கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.