தமிழகத்தில் இதுவரை 8 எம்.எல்.ஏ.க்களுக்கு தொற்று உறுதி

தமிழகத்தில் இதுவரை சட்டமன்ற உறுப்பினர்கள் 8 பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-07-02 13:18 GMT
தமிழகத்தில் இதுவரை சட்டமன்ற உறுப்பினர்கள் 8 பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தற்போது, உயர் கல்வி துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் சதன் பிரபாகர்,  பழனி, குமரகுரு ஆகியோர் கொரோனா தொற்றார் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதே போன்று, சட்டமன்ற உறுப்பினர்கள், வசந்தம் கார்த்திகேயன், ஆர்.டி. அரசு, மஸ்தான் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில்,  சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்