மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு - போலீசார் அடித்து சித்ரவதை செய்ததாக குற்றச்சாட்டு

போலீசார் அடித்து சித்ரவதை செய்ததாக கூறி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்தார்.

Update: 2020-06-28 04:19 GMT
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் ஹைஸ்கூல் தெருவைச் சேர்ந்தவர் குமரேசன். நிலத் தகராறு காரணமாக இவர் மீது செந்தில் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து கடந்த மே மாதம் போலீசார் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் பயந்து போன குமரேசன் நடந்ததை யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார். இதனிடையே கடந்த 10ஆம் தேதி திடீரென ரத்த வாந்தி எடுத்த அவர், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது போலீசார் தன்னை தாக்கியதாகவும், அதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்திலும் குமரேசனின் தந்தை புகார் அளித்திருந்தார். கடந்த 16 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குமரேசன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மரணத்திற்கு உரிய நியாயம் கேட்டு உறவினர்கள் போராட்டம் நடத்தினர். 
Tags:    

மேலும் செய்திகள்