வெளியூர் செல்ல ஆர்வம் காட்டாத மக்கள் - கூட்டமின்றி காணப்படும் தனியார் பேருந்துகள்

ஊரடங்கு தளர்வுக்கு பிறகு இன்று முதல் இயக்கப்படும் தனியார் பேருந்துகளில் பயணிக்க பயணிகள் ஆர்வம் காட்டவில்லை.

Update: 2020-06-10 17:02 GMT
ஊரடங்கு தளர்வுக்கு பிறகு இன்று முதல் இயக்கப்படும் தனியார் பேருந்துகளில் பயணிக்க பயணிகள் ஆர்வம் காட்டவில்லை. தமிழகத்தில் தனியார் பேருந்துகள் இன்று முதல் கட்டுப்பாடுகளுடன் இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.  இதனையடுத்து நாகை மாவட்டத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் சீர்காழி, மயிலாடுதுறை, வேதாரண்யம் பகுதியில் இருந்து இயக்கப்படுகின்றன.  35 நபர்களுடன் இயக்கப்படும் பேருந்துகள் மண்டலம் விட்டு மண்டலம் செல்லாத காரணத்தால் இந்த பேருந்துகளில் பயணிக்க பயணிகள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் தனியார் பேருந்துகளில் குறைந்த அளவு பயணிகளே பயணம் செய்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்