மாஞ்சா நூலில் பட்டம் விட்டால் கடும் நடவடிக்கை - ட்ரோன் மூலம் போலீசார் தீவிர கண்காணிப்பு

சென்னையில் மாஞ்சா நூலில் பட்டம் விட்டு இளைஞர்கள் தங்கள் பொழுதை கழித்து வருவதால் இதுகுறித்த விவரங்களை தெரிவிக்க சென்னை முழுவதும் தொலைபேசி எண்ணுடன் போலீசார் விழிப்புணர்வு பேனர் வைத்துள்ளனர்.

Update: 2020-06-09 13:15 GMT
சென்னையில் மாஞ்சா நூலில் பட்டம் விட்டு இளைஞர்கள் தங்கள் பொழுதை கழித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, இதுகுறித்த  விவரங்களை தெரிவிக்க, சென்னை முழுவதும் தொலைபேசி எண்ணுடன் போலீசார் விழிப்புணர்வு பேனர் வைத்துள்ளனர். மேலும், அயனாவரம், வியாசார்பாடி,கீழ்ப்பாக்கம், பெரியமேடு,சூளைமேடு   போன்ற இடங்களில் டிரோன் மூலம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்