ஆன்லைன் வழி தேர்வு - அண்ணா பல்கலை. முடிவு
பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் தேர்வு நடத்த அண்ணா பல்கலைக்கழகம் பரிசீலித்து வருகிறது
கொரோனா பாதிப்பு காரணமாக கல்லூரிகள் அனைத்தும்
மூடப்பட்டுள்ள நிலையில், இறுதியாண்டு பொறியியல் மாணவர்களுக்கு விரைவாக தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயத்தில் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளது.
*இதற்காக புதிய வழிமுறையினை அண்ணா பல்கலைக் கழகம் ஆலோசித்து வருகிறது .
* அதன்படி இறுதியாண்டு மாணவர்களுக்கு நடத்தவேண்டிய இறுதி செமஸ்டர் தேர்வினை ஆன்லைன் முறையில் நடத்த பரீசிலித்து வருகிறது.
* ஆன்லைன் முறையில் தேர்வுகள் நடத்தப்பட்டாலும், கிராமப்புற மாணவர்களின் வசதிக்காக நேரடியாகவும் தேர்வுகள் நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது