ஆன்லைன் வழி தேர்வு - அண்ணா பல்கலை. முடிவு

பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் தேர்வு நடத்த அண்ணா பல்கலைக்கழகம் பரிசீலித்து வருகிறது

Update: 2020-06-07 09:56 GMT
கொரோனா பாதிப்பு காரணமாக கல்லூரிகள் அனைத்தும்
மூடப்பட்டுள்ள நிலையில், இறுதியாண்டு பொறியியல் மாணவர்களுக்கு விரைவாக தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயத்தில் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளது.

*இதற்காக புதிய வழிமுறையினை அண்ணா பல்கலைக் கழகம் ஆலோசித்து வருகிறது .

* அதன்படி இறுதியாண்டு மாணவர்களுக்கு நடத்தவேண்டிய இறுதி செமஸ்டர் தேர்வினை ஆன்லைன் முறையில் நடத்த பரீசிலித்து வருகிறது.

* ஆன்லைன் முறையில் தேர்வுகள் நடத்தப்பட்டாலும், கிராமப்புற மாணவர்களின் வசதிக்காக நேரடியாகவும் தேர்வுகள் நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது
Tags:    

மேலும் செய்திகள்