தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி மீது வழக்கு - தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் நடவடிக்கை

கும்பகோணத்தில் அனுமதியின்றி தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உட்பட 40 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Update: 2020-05-27 02:47 GMT
கும்பகோணத்தில்  அனுமதியின்றி  தடையை மீறி  ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உட்பட 40 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.மத்திய அரசின் புதிய மின்சார திருத்த சட்டத்தை கண்டித்து, விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை வலியுறுத்தி கும்பகோணத்தில் காந்தி பூங்கா வாயிலில்  காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்