தண்ணீர் எடுக்க சென்ற 13 வயது சிறுமிக்கு பாலியல் வன்முறை - ஆபத்தான நிலையில் சிறுமி மருத்துவமனையில் அனுமதி

புதுக்கோட்டையில் 13 வயது சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2020-05-18 11:19 GMT
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியை சேர்ந்த 13 வயதான சிறுமி தன் வீட்டின் அருகே குளத்திற்கு தண்ணீர் எடுக்க சென்றுள்ளார். அப்போது சிறுமியை பின்தொடர்ந்த கும்பல் அவரை பாலியல் வன்முறை செய்ததாக கூறப்படுகிறது. சிறுமியை காணாமல் அவரது பெற்றோர் குளக்கரைக்கு சென்ற போது அவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து சிறுமி மீட்கப்பட்டு தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆபத்தான நிலையில் சிறுமிக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே சிறுமியை பாலியல் வன்முறை செய்த கும்பல் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்