ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை - திருமணமான 3 மாதத்தில் விபரீதம்

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த ரெங்கசமுத்திரம் கிராமத்தில் திருமணமான மூன்று மாதத்தில் ராணுவ வீரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Update: 2020-05-14 14:53 GMT
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த ரெங்கசமுத்திரம் கிராமத்தில் திருமணமான மூன்று மாதத்தில் ராணுவ வீரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ராணுவ வீரரான சுரேந்திரநாத், சென்ற மாதம் விடுமுறைக்கு ஊர் திரும்பிய நிலையில், குடும்ப தகராறு காரணமாக தனது மனைவி ராதிகாவை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட சுரேந்திரநாத், தனது வீட்டு மாடியில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்