"பயண அனுமதி சீட்டு பெற அலுவலகம் வர வேண்டாம்" - சென்னை மாநகராட்சி அறிவிப்பு

அவசர பயண அனுமதி சீட்டு பெற, யாரும் அலுவலகத்துக்கு வர வேண்டாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Update: 2020-05-02 02:38 GMT
அவசர பயண அனுமதி சீட்டு பெற, யாரும் அலுவலகத்துக்கு வர வேண்டாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அவசர பயண அனுமதி சீட்டு வழங்கும் அதிகாரம், மின்னணு அனுமதி சீட்டு கட்டுப்பாட்டு அறைக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. TN EPASS .TNEGA. ORG  என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து அனுமதி சீட்டு பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்