கும்பகோணம் : ஸ்ரீராமானுஜர் அவதார திருநாள் வைபவம்
கும்பகோணம் அருகே நாதன் கோவில் பகுதியில் உள்ள ஜெகநாதர் கோயிலில் ஸ்ரீராமானுஜர் அவதார திருநாள் வைபவம் நடைபெற்றது.
கும்பகோணம் அருகே நாதன் கோவில் பகுதியில் உள்ள ஜெகநாதர் கோயிலில் ஸ்ரீராமானுஜர் அவதார திருநாள் வைபவம் நடைபெற்றது. கோயில் ஊழியர்கள் மட்டும் கலந்து கொண்ட இந்த வைபவத்தில் ராமானுஜர் சிலைக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கோயிலின் உள் பிரகாரத்தில் மங்கல வாத்தியங்கள் முழங்க அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ராமானுஜர் வீதி உலா நடைபெற்றது.