கொரோனா தடுப்பு - நடிகர் அஜித் ரூ.1.25 கோடி நிதி

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக நடிகர் அஜித், ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் நிதி அளித்துள்ளார்.

Update: 2020-04-07 14:47 GMT
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக நடிகர் அஜித், ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் நிதி அளித்துள்ளார். உலகை அச்சுறுத்தி உள்ள கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் போராடிவரும் நிலையில், படப்பிடிப்பு இன்றி பெப்சி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 25 லட்சம் ரூபாய் நிதி வழங்கிய நடிகர் அஜித், பிரதமர் மற்றும் முதலமைச்சர் ஆகியோரின் நிவாரண நிதிக்கு தலா 50 லட்சம் ரூபாய் வழங்கி உள்ளார். நடிகர் அஜித், மொத்தம் ஒண்ணே கால் கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்