"அகல் விளக்கு ஏற்றுவதால் கொரோனாவை தடுக்க முடியுமா?, பிரதமர் மோடி விளக்க வேண்டும்" - சுப்பராயன் எம்.பி.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அதிமுக மற்றும் பாஜகவினர் அரசியல் விளம்பரம் செய்வதாக திருப்பூர் எம்.பி சுப்பராயன் குற்றம்சாட்டி உள்ளார்.

Update: 2020-04-04 04:24 GMT
கொரோனா  தடுப்பு நடவடிக்கைகளில் அதிமுக மற்றும் பாஜகவினர் அரசியல் விளம்பரம் செய்வதாக திருப்பூர் எம்.பி சுப்பராயன் குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், செல்போன் விளக்குகளை ஒளிர விடுவது மற்றும் அகல் விளக்கை ஏற்றுவதன் மூலம் கொரோனாவை தடுக்க அறிவியல் பூர்வமான ஆதாரம் உண்டா என்பதை பிரதமர் மோடி விளக்க வேண்டும் என கோரினார். 

Tags:    

மேலும் செய்திகள்