"நாகையை இரண்டாக பிரித்து தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை உருவாக்கப்படும்" - முதலமைச்சர்

நாகையை இரண்டாக பிரித்து, தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை உருவாக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார்.;

Update: 2020-03-24 08:06 GMT
* நாகையை இரண்டாக பிரித்து, தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை உருவாக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார்.

* பணிக்காலத்தில் கடுமையான நோயினால் பாதிக்கப்படும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ நிதி உதவி 50 ஆயிரம் ரூபாயிலிருந்து இரண்டு லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

* ஆதிதிராவிடர் நல விடுதி பள்ளி மாணவர்களுக்கான உணவுத் தொகை 900 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாயாகவும்,கல்லூரி மாணவர்களுக்கான உணவுத் தொகை ஆயிரம் ரூபாயிலிருந்து ஆயிரத்து 100 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றார்.

* திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் மருந்தியல் தொழிற்பூங்கா, சிப்காட் நிறுவனத்தால் 770 கோடி திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்படும் என அவர் அறிவித்தார். 

* சானடோரியம், தாம்பரம், மதுரை மாவட்டம் தோப்பூர், கோவை, தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி உள்ளிட்ட மருத்துவமனைகள் பயோ சேப்டி லெவல் 3 நிலைக்கு மேம்படுத்த 110 கோடி செலவிடப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார். 

* வான்வழி அவசர கால சேவை 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்படும், 

*  தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் அமைந்துள்ள மணிமண்டபத்தில், வெள்ளையத்தேவனுக்கு முழு உருவ வெண்கலச்சிலை அமைக்கப்படும் என அவர் அறிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்