சிமெண்ட் ஆலைக்கு வரும் கன ரக வாகனங்களுக்கு தடை - அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்னா உத்தரவு
அரியலூர் மாவட்டத்தில் கொரோனா பரவும் அபாயம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை செய்து இருந்தனர்.
அரியலூர் மாவட்டத்தில் கொரோனா பரவும் அபாயம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை செய்து இருந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு நடைபெற்ற அதிகாரிகள் கூட்டத்தில் பேசிய அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்னா, அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிமெண்ட் தொழிற்சாலை நிறுவனங்களிலும் இயங்கும் கனரக வாகனங்கள் வருகிற 31 ஆம் தேதி வரை இயக்க வேண்டாம் என, வாய்மொழி உத்தரவிட்டுள்ளார். அதனை தொடர்ந்து அரியலூர் டிஎஸ்பி திருமேனி அனைத்து சிமெண்ட் ஆலைகளும் வரும் லாரிகளை தடை செய்துள்ளார்.