மஞ்சள், வேப்பிலை சாறில் ஊற வைத்த பருத்தி துணி முக கவசம் : பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கிய முதியவர்

ராணிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மோகனசுந்தரம்.

Update: 2020-03-21 19:47 GMT
ராணிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மோகனசுந்தரம். சமூக ஆர்வலரான இவர், முத்துக்கடை பேருந்து நிலையத்தில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், இயற்கை கிருமி நாசிகளாக கருதப்படும் மஞ்சள், வேப்பிலை சேர்த்து தயார் செய்யப்பட்ட சாறில் ஊறவைத்த பருத்து துணியிலான முகக்கவசங்களை இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கினார்.  மீண்டும் பயன்படுத்தக்கூடிய  வகையில் தயாரிக்கப்பட்ட இந்த முகக்கவசங்களை பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்