சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி - கொள்ளையர்களை மடக்கி பிடித்த பொதுமக்கள்

ஈரோட்டில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் செயினை பறிக்க முயன்ற சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

Update: 2020-03-21 04:02 GMT
ஈரோட்டில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் செயினை பறிக்க முயன்ற சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. விஜயமங்கலத்தை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர், தனது வீட்டருகே நடந்து சென்ற போது, இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில், சுதாரித்துக் கொண்ட ராஜேஸ்வரி சத்தம் போடவே அங்கிருந்த மக்கள், கொள்ளையர்களை மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் மதுரையை சேர்ந்த விணுசக்கரவர்த்தி, சிவகங்கையை சேர்ந்த குணசேகரன் என தெரியவந்தது. இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்