காதலர்களை மிரட்டி ரூ.5000 பணம் பறிப்பு - 2 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

சென்னையில் காதலர்களை மிரட்டி பணம் பெற்ற 2 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.

Update: 2020-03-21 02:46 GMT
சென்னையில் காதலர்களை மிரட்டி பணம் பெற்ற, 2 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். கே.கே.நகர் சிவலிங்கபுரத்தில் இரவில் காதலியுடன் பேசிக்கொண்டிருந்த சிவராஜ் என்பவரை மிரட்டி, ரோந்து பணியில் இருந்த தலைமை காவலர் சிவகுரு, காவலர் திலகர்பாபு ஆகியோர் 5 ஆயிரம் பணம் பெற்றதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, அவரது காதலிக்கு, சிவகுரு குறுஞ்செய்தி அனுப்பியதை தட்டிக்கேட்டதால், அவர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இதுகுறித்த தகவலின் பேரில் விசாரணை மேற்கொண்ட தெற்கு மண்டல இணை ஆணையர் மகேஸ்வரி, காவலர்கள் இருவரையும் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டார்
Tags:    

மேலும் செய்திகள்