குப்பை கிடங்கில் கிடந்த விவசாயிகள் கடன் அட்டைகள் - விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி
காஞ்சிபுரம், காமாட்சி அம்மன் அவின்யு தெருவில் உள்ள குப்பை கிடங்கில் இந்தியன் வங்கி மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கடன் அட்டைகள் மூட்டை மூட்டையாக கிடந்துள்ளது.
காஞ்சிபுரம், காமாட்சி அம்மன் அவின்யு தெருவில் உள்ள குப்பை கிடங்கில் இந்தியன் வங்கி மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கடன் அட்டைகள் மூட்டை மூட்டையாக கிடந்துள்ளது. அதனை அப்பகுதி குழந்தைகள் எடுத்து வந்த விளையாடிய போது கடன் அட்டைகள் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வாலாஜாபாத் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் உத்திரமேரூர் பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கடன் அட்டைகள் அதில் இருந்தது குறிப்பிடத்தக்கது.