தனியார் பொறியியல், மருத்துவக் கல்விக் கட்டண நிர்ணயம் : தனியார் கல்வி நிறுவன கருத்துகளை பெற்று முடிவு
பொறியியல், மருத்துவம் மற்றும் சட்ட பாடப் பிரிவுகளுக்கு வகுப்புகள் தொடங்கும் முன்பு கட்டணம் நிர்ணயம் செய்யப்படும் கட்டண நிர்ணயக் குழு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள தனியார் பொறியியல், மருத்துவம், சட்டம், பாலிடெக்னிக் உள்ளிட்ட படிப்புகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணம், கட்டண நிர்ணயக் குழுவால் நிர்ணயம் செய்யப்படுகிறது. இக்குழு நிர்ணயம் செய்யும் கட்டணம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றப்படும். அதன்படி, 2020-21 ஆம் கல்வி ஆண்டுக்கு புதிய கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும். இந்நிலையில், குழுவின் புதிய தலைவராக உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி வெங்கட்ராமன் பொறுப்பேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., உணவக மேலாண்மை படிப்புகளுக்கான கட்டணம்குறித்து கல்லூரிகளிடம் கருத்துகள் பெறப்பட்டு கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட உள்ளதாகவும் வரவு, செலவு அறிக்கை, வங்கிக் கணக்கு அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்படும் எனவு தெரிவித்தார்.