இந்து மக்கள் கட்சி நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு - டூவீலர்களில் வந்த 7 பேர் கொண்ட மர்ம கும்பல் வெறிச்செயல்

திருப்பூரில் இந்து மக்கள் கட்சி நிர்வாகியை மர்ம கும்பல் ஒன்று அரிவாளால் வெட்டிவிட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2020-03-18 02:15 GMT
இந்து மக்கள் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட துணைசெயலாளர் பொறுப்பு வகித்து வரும் பகவான் நந்து கணக்கம்பாளையத்தில் எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார். நேற்றிரவு, பகவான் நந்து  கடையைப் பூட்டி விட்டு வீட்டுக்கு  இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது இரு  சக்கர வாகனங்களில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டி உள்ளது.  இதில், பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து பெருமாநல்லூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்