தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2020-03-17 10:20 GMT
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மதுரை, திண்டுக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இயல்பைவிட இரண்டிலிருந்து மூன்று டிகிரி வெப்பநிலை அதிகரித்து காணப்படும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் ஆகும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஆகும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரையில் 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்